விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது! பொலிஸ் அதிகாரி வெளியிட்ட பகிரங்க தகவல்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Politician Sri Lankan political crisis
By Badurdeen Siyana Oct 01, 2023 05:44 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

சட்ட ரீதியான முறையில் விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது என திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை நிறுத்துமாறு கோரி இன்று (01.10.2023) பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க இருந்தனர்.

திருகோணமலையில் விகாரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலையில் விகாரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


இந்நிலையில் திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க வேண்டாம் என தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

சட்டவிரோத கட்டடம்

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிவில் சமூக ஆர்வலரான வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் உட்பட சிலர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதேநேரம் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டாம் என பொலிஸார் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்டனர்.

விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது! பொலிஸ் அதிகாரி வெளியிட்ட பகிரங்க தகவல் | Vihara In Trincomale Sri Lanka Police

அத்துடன் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்யும் போது திருகோணமலைக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து சொல்ல தேவையில்லை என குறித்த சிவில் சமூக ஆர்வலரை விரட்டியதையும் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரம் நாட்டில் இருந்த போதிலும் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத பொலிஸாருக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது எனவும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆளுநரின் உத்தரவு

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கட்டட நிர்மாண பணிகளை இடை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் கடந்த சில நாட்களாக கட்டட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது! பொலிஸ் அதிகாரி வெளியிட்ட பகிரங்க தகவல் | Vihara In Trincomale Sri Lanka Police

இந்நிலையில் குறித்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் விகாரை சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு வருவதாக திருகோணமலை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அப்படி அந்த கட்டடத்தை கட்டுவதை தடை செய்வதென்றால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தாக்கல் செய்யுமாறும், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து சமூகங்களுக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US