திருகோணமலையில் விகாரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை கட்டுமானங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு தடையுத்தரவு வழங்கியுள்ளது.
குறித்த விகாரைக்கு எதிராக இன்று (01.10. 2023) மேற்கொள்ளப்பட இருந்த ஆர்ப்பாட்டத்திற்கே திருகோணமலை நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது.
நீதிமன்ற தடையுத்தரவு
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்த போது பொலிஸார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும், நீதிமன்ற தடையுத்தரவையும் ஒலி பெருக்கி மூலம் வாசிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த பகுதியில் எதிர்ப்பினை காட்ட முற்பட்ட போது தடுத்து நிறுத்தியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சமூக ஆர்வலரான வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் பொலிஸ் உயரதிகாரியால் தடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு செய்தியாளர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்த முட்பட்ட போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்காக அங்கு வருகை தந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
