வெளிநாட்டவர் உட்பட ஐவருக்கு பொலிஸார் வலை வீச்சு
மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயில் ஒன்றை அறுத்து அதன் இறைச்சியை வறுத்து அதனை உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உட்பட வேடுவ சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு அல்லது 2020ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
இந்த காணொளியை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வனவிலங்கு காப்பாளர் – ஹெனானிகல டபிள்யூ.எம்.குமாரசிறி விஜேகோன், மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட மயிலை வேட்டையாடுவதில் சமூகத்தின் பாரம்பரிய வேட்டைக் கருவிகளான வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளியின்படி பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி மயிலை வறுத்து, தேனில் குழைத்து உட்கொள்வது காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri