பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் (13.06.2024) இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அனுரவை பலரும் வரவேற்றுள்ளனர்.
உரையாற்றவுள்ள அனுர
இந்நிலையில், இன்று சனிக்கிழமையன்று கிரிஸ்டல் கிரான்டில், இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.
ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்க கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கையர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |