புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு
புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தரமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாத்திரமே நாட்டிற்குள் அனுமதிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது வெளிநாட்டு நாணயம் மற்றும் அரச வருமான பிரச்சினைகளுக்கு உதவும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திட்டம் முன்வைப்பு
புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்கும், உயர்தர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பதற்கும் தமது சங்கம் அரசாங்கத்திற்கு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க டொலர்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும், அத்துடன் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் ஒரு வாகனத்தை வாங்கவும், அரச வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் இறக்குமதியால், சுமார் 1.25 - 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றன என்றும் மெரேஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam