புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இந்த ஆண்டிற்கான வெசாக் கொண்டாட்டங்கள்
இந்த ஆண்டுக்கான தேசிய வெசாக் கொண்டாட்டங்கள் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ளது.
அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஹலாவத்த கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் கொண்டாட்டங்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் வெசாக் விழா
அரசாங்க வெசாக் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் அமைச்சர்களும் வெளிநாடுகளின் தூதுவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வருடத்தின் வெசாக் தொனிப்பொருளானது “உனக்கே விளக்காக இரு” என்பதாகும்.
வெசாக் வார கொண்டாட்டங்கள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
