ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Iran Middle East
By Shadhu Shanker Mar 05, 2026 09:31 PM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் கப்பலில் மீட்கப்பட்ட 208 ஈரானிய கடற்படையினரை வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக மையமாக விளங்குவதால், சர்ச்சைக்குரிய இந்த கப்பலை அங்கு நிறுத்தி வைப்பது கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

மேலும், சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை (Insurance rates) அதிகரிக்கவும் இது காரணமாகலாம். எனவே, குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர்

அதேவேளை, கப்பலில் உள்ள 208 ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டு, எமது கடற்படையினரின் படகுகள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்படவுள்ள 208 பேரில் 53 அதிகாரிகள், 84 கெடட் (Cadet) அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர்,23 கடற்படையினர் அடங்குகின்றனர்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

கப்பலில் 300 குழந்தைகள் உள்ளார்கள் என்ற தகவல் பொய்யானது என்று கூறப்படுகின்றது.

இந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைந்து கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர் வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது இணைப்பு

இலங்கை அருகே உள்ள ஈரானிய கப்பல் IRIS Bushehr! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு..

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 சிறப்பு அறிக்கை

 ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தற்போதைய முன்னேற்றம் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். 

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

அணிசேரா கொள்கையை இறுக்கமாக கடைபிடிக்கும் அதேநேரம், மனிதாபிமான ரீதியான முன்னெடுப்புகளையும் இலங்கை மேற்கொள்ளும்.

எந்த ஒருநாடும், இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசத்தை தமது நலனுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. 


நடுநிலையான கொள்கை

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் இலங்கை நடுநிலையான கொள்கையை பின்பற்றும். இலங்கையின் கடற்பரப்பில் தஞ்சமடைவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இராச்சியத்துக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

தற்போதைய சூழ்நிலையை குறுகிய அரசியல் இலக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

உலக அமைதியை அடைய அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பு அவசியம் என்று அவர் கூறினார்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US