இலங்கையில் இருந்து திரும்பிய மோடியின் விமானத்தில் கிடைத்த அதி முக்கிய காணொளி
இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இந்த கருத்து பதிவானது இலங்கைக்கு மோடி ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளதாக அரசியல் ஆர்வளர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மோடி அனுராதபுரத்திலிருந்து நேற்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவை சென்றடைந்தார்.
இந்த பயணத்தின் போது இலங்கை - இந்திய கடற்பரப்புக்கு இடையில் உள்ள பல தீவுகளை கண்கானித்த ஒரு காணொளியையும் பகிர்ந்திருந்தார்.
மோடியின் இலங்கை விஜயம் பரஸ்பர இருதரப்பு விஜயமாக பார்க்கப்பட்டாலும் இதன் பின்னணி தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் மோடியின் உலங்கு வானூர்தி பயணத்தில் வெளியாகிய காணொளியின் பின்புலம் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...