முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்ததனவுக்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஒத்திவைப்பு
புதிய இணைப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்கான தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரணா குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணைகள் நடைபெற்றிருந்தன.
இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்குகளுக்கான தீர்ப்புகள் ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக வழக்குகளுக்கான தீர்ப்புகள் கடந்த ஏப்ரல் 30 ம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில் இன்றைய தினம் வரை தீர்ப்புகளை வாசிப்பது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவ்வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என நீதிபதி அறிவித்தார். அதன்படி, ஜூன் 09 அன்று தீர்ப்புகள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளன.
இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகள் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது.
இருப்பினும், வழக்குககளின் தீர்ப்புகளை அறிவிப்பதை மே 26 (இன்று) வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் உத்தரவிட்டிருந்தார்.
இன்று வெளியாகும் தீர்ப்புக்கள்
அதனடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வாசிக்கப்படவுள்ளன.
சரண குணவர்த்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீரப்புகள் குறித்து அண்மையில் அரசாங்கம் மறைமுகமாக வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறை ஆதிக்கத்தில் தலையிடும் வகையில் அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சரண குணவர்தன, 2006ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, வாடகை அடிப்படையில் லொத்தர் சபைக்கு வாகனங்களை பெற்றுக் கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு அவருக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது நீண்டகால வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் இன்று வழங்கப்படவுள்ளன.