வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும்
எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
15 வகையான வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
பலர் தற்பொழுது வங்கிகளில் முதலீடு செய்வதனை விடவும் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு செலவழித்து வாகனங்களை கொள்வனவு செய்வதனை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமை வழமைக்கு திரும்யும் எனவும் அவ்வாறு நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் தற்பொழுது கூடுதலாக செலவிடும் பணம் விரயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளினால் வாகன இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெகன் ஆர் மற்றும் பிராடோ ரக வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் உயர்வடையும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri