வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும்
எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
15 வகையான வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
பலர் தற்பொழுது வங்கிகளில் முதலீடு செய்வதனை விடவும் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு செலவழித்து வாகனங்களை கொள்வனவு செய்வதனை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமை வழமைக்கு திரும்யும் எனவும் அவ்வாறு நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் தற்பொழுது கூடுதலாக செலவிடும் பணம் விரயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளினால் வாகன இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெகன் ஆர் மற்றும் பிராடோ ரக வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் உயர்வடையும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
