இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா..! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை பதிவு செய்து இலங்கைக்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மீள் ஏற்றுமதி
மேலும் கூறுகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீள் ஏற்றுமதிக்கான எந்த தயாரிப்புகளும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
