யாழில் வாகன விபத்து: 9 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைப்பந்தி சந்திக்கு அருகாமையிலுள்ள வாகன திருத்தகமொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது வான் ஒன்று மோதியதில் 9 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(19.06.2024) மாலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை வீதியூடாக பயணித்த வான் ஒன்றே இவ்வாறு மோதியுள்ளதாகவும் வானின் சாரதி தென்னிலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |