லண்டனில் மூடப்பட்ட பிரதான பாலம்
லண்டன் நகரில் அமைந்துள்ள பிரதான பாலமான செல்சியாஸின்(Chelsea Bridge) வடக்குப் பகுதி ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்து தாமதமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதாலயே இந்த பாலம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது நேற்று(19.06.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் லண்டன் நோயாளர் காவு வண்டி சேவை குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடந்துவருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், செல்சியா பாலம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
