மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு - கல்முனை(Batticaloa) பிரதான வீதி குருக்கள்மடம் பகுதியில் கெப் ரக வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கெப் ரக வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் மோதிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் உயிரி பிழைத்ததாகவும் சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri