மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு - கல்முனை(Batticaloa) பிரதான வீதி குருக்கள்மடம் பகுதியில் கெப் ரக வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கெப் ரக வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் மோதிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் உயிரி பிழைத்ததாகவும் சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam