13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: டக்ளஸ் தரப்பு வலியுறுத்து
13ஆவது திருத்தத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (02.04.2024) ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையை பொறுத்தளவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கூறப்படுகின்றது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
இந்நிலையில், மார்ச் 12 இயக்கம், இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தர தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக 13ஆவது திருத்தத்தையாவது உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் எனவும் மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜீன பாராக்கிரம வலியுறுத்தியுள்ளார். இதனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வரவேற்கின்றோம்.
இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக எமது அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான அடிப்படையாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடான 13ஆவது அரசியலமைப்பை முன்னெடுப்பதனூடாக எமது அரசியல் தீர்வுக்கான வழியை நோக்கி நகர முடியும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இதனை அன்று நிராகரித்த பலர் இன்று புதுடில்லிவரை சென்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதிலும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பேசமுனைந்துள்ளனர்.
போலி வாக்குறுதிகள்
தற்போது தூய்மையான அரசியல் காலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் இதனை வலியுறுத்த முனைந்தது ஒரு மாற்றத்தின் முதற்படியாகவே எண்ணுகின்றோம்.
காலங்காலமாக தேர்தல் காலங்களில் மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமற்ற கவர்ச்சிகரமான மற்றும் ஆக்ரோசமான கோசங்களை முன்வைப்பதால் எமது மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வு பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
எனவே, எமது நீண்டகால வலியுறுத்தலாக இருந்த மாகாண முறைமையை நடைமுறைப்படுத்த அனைவரும் பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
