வெடுக்குநாறி மலை ஆதிலிங்கம் விவகாரம்: தமிழர் - இந்துமதத் தரப்புகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றேன்! அமைச்சர் விதுர
குண்டர்களின் காடைத்தனமான செயற்பாட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இன – மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக வவுனியா - வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் பௌத்த சாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசும் பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் (28.03.2023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் - இந்துமதத் தரப்பினர்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நெடுந்தீவு, கச்சத்தீவு ஆகியவற்றில் தமிழரின் மத அடையாளங்களை அழிக்கும் வகையில் அரசும் தொல்பொருள் திணைக்களமும் செயற்பட்டு வருகின்றன என்று தமிழர் தரப்பினர் மற்றும் இந்துமதத் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை துறைசார் அமைச்சர் என்ற வகையில் அடியோடு மறுக்கின்றேன்.
அதேவேளை, நெடுந்தீவு, கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் அரசு உரியக் கவனம் செலுத்தும்.
குருந்தூர்மலை விவகாரம்
கச்சத்தீவில்
கடமையிலுள்ள கடற்படையினர் சிலர் வழிபடுவதற்காகவே அங்குச் சிறிய புத்தர் சிலை
ஒன்று வைக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்தேன்.
குருந்தூர்மலை விவகாரம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட விடயம். இது
தொடர்பில் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்க நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
