சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மாணவர் நாடாளுமன்ற தேர்தல்!
வவுனியா தெற்கு வலய மாணவர் நாடாளுமன்ற தெரிவு இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பனையின் கேட்போர் கூடத்தில் சமூக விஞ்ஞான பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று (20.06.2025) இடம்பெற்றது.
வாக்களிப்பு
வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் ச.கபிலாஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் மூலம் வலய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.
இதில் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அமல்ராஜ், தட்சாயினி, வீரசிங்கம், வலய கணக்காளர், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் சுபா, சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







