வர்த்தக நிலையங்களில் தண்டப்பணம் அறவீடு: மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் இருந்து நீதிமன்றத்தின் ஊடாக 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 01.09.2022 தொடக்கம் 15.10.2022 வரையான காலப்பகுதியில் 66 வர்த்தக நிலையங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் சோதனை செய்யப்பட்டன.
அதில் முறையாக சுட்டுத்துண்டில் தகவல் வழங்காமை தொடர்பாக 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பாக 20 வர்த்தக நிலையங்க்ளுக்கு எதிராகவும், நுகர்வோரை ஏமாற்றும் இயல்புடைய நடத்தையில் ஈடுபட விலையை மாற்றியமை தொடர்பில் 29 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் விலை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த காலப்பகுதியில் மேற்குறித்த வழக்குகள் உட்பட 87 வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறவிடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam