தமிழ்த்தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு
தமிழ்த்தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கோவிட்டின் தாக்கம் காரணமாகக் கடந்த காலங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் மஸ்கலிய பகுதியில் கொரோனா இடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் பொருட்களைச் சேகரித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக ப. தவபாலன் முன்னின்று வழங்கியிருந்தார்.
இவ்வாறான உதவியினை மேற்கொண்டமைக்காக குறித்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பணியின் நிமித்தம் அவர் வெளியே சென்றிருந்த சமயம் அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார் சிங்கள மொழியில் எழுதப்பட்ட அழைப்பாணையினை வழங்கி 12.07.2021 காலை 9.30 மணிக்கு வருமாறும் கூறிச்சென்றுள்ளனர்.