இடிக்கப்பட போகிறதா ஈபிள் கோபுரம்... வெளியான உண்மை
ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி (02.10.2025) ஈபிள் கோபுரம் மூடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவின.
ஈபிள் கோபுரம் 2026ஆம் ஆண்டுடன் இடிக்கப்பட இருப்பதாகவும் அதனால் கோபுரத்தை இறுதியாக பார்க்க நினைப்பவர்கள் பார்த்துக்கொள்ளுமாறும் செய்திகள் வெளிவந்தன.
உண்மைக்கு புறம்பான செய்திகள்
நீண்ட காலமாக பிரபலமாக இருந்த ஈபிள் கோபுரத்தை காண தற்போது யாரும் வருவதில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்பட்டிருந்தது.
எனினும், கோபுரத்தை நிர்வகித்துவரும் 'SETE' அமைப்போ பரிஸ் நகரத்தின் கலாசார அமைப்புக்களோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இதிலிருந்து, ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவது குறித்து வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
