போர் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால அணுசக்தி மோதலுக்குத் தீர்வு காணும் நோக்கில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை அதிகரித்துள்ள சூழலில், இந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கா ஃப் (Steve Witkoff) மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் அடங்கிய குழு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை
ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல் புசைதி இந்த இக்கட்டான பேச்சுவார்த்தைக்குப் பாலமாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த விவாதத்தின் முக்கிய நோக்கம், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை 5 சதவீதத்திற்கும் குறைவான செறிவூட்டலுக்குக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குவதும் ஆகும்.
அணுசக்தித் திட்டம்
ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதி வழியிலானது என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் கிராஸியும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

10 முதல் 15 நாட்களுக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் "மிக மோசமான விளைவுகள்" ஏற்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளதால், பிராந்தியத்தில் ஒரு போர் ஏற்படுவதைத் தவிர்க்க இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றே இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri