யாழ்.ஆழியவளையில் பெருமளவிலான கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று(16.7.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகை காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
அதன் அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர்14.5 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனும் குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.