வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூங்கா வீதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி செல்ல முற்பட்ட பிக்கப் ரக வாகனம் ஒன்று வவுனியா நகரிலிருந்து குருமன்காட்டு பகுதி நோக்கி மன்னார் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த, மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செட்டிகுளம் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
மன்னார் வீதியில் பயணித்து கொண்டிருந்த நிர்வாக உத்தியோகத்தர் மீது வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து முப்பது மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்பட்டதுடன் விபத்தில் சிக்கிய உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.






படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
