வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூங்கா வீதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி செல்ல முற்பட்ட பிக்கப் ரக வாகனம் ஒன்று வவுனியா நகரிலிருந்து குருமன்காட்டு பகுதி நோக்கி மன்னார் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த, மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செட்டிகுளம் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
மன்னார் வீதியில் பயணித்து கொண்டிருந்த நிர்வாக உத்தியோகத்தர் மீது வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து முப்பது மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்பட்டதுடன் விபத்தில் சிக்கிய உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.






உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
