மட்டக்களப்பின் தமிழர் பகுதியில் திரண்ட மக்கள்: தொல்பொருள் செயலணியின் முயற்சி தோல்வி
மட்டக்களப்பு, வந்தாறுமூலை - வேரத்தடி என்கின்ற தமிழர் பகுதியில் தொல்பொருள் செயலணி எல்லைக்கற்கள் நடும் முயற்சியில் இன்று காலை ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை ஊர் மக்கள் உடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் விடயம் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yoheswaran) மற்றும் சிறிநேசன் (Gnanamuthu Srineshan) உள்ளிட்டோரும் அப்பகுதிக்கு உடன் விரைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் செயலணியின் எல்லைக்கற்களை நடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.






சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 16 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam