யாழில் போலி கையொப்பம் வைத்து பெறுமதிமிக்க காணி மோசடி
ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணியொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இந்தக் காணி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வசிப்பவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களான இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள்
அவர்களில் ஒருவர் பல்கலைக்கழகமொன்றின் கல்விசாரா ஊழியராவார். இந்த இருவரும் காணி மீதான தமது பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.

அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே மேலும் இருவர் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        