இலங்கையின் விலங்கு உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள்
இலங்கையின் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு புதிய கால்நடை மருத்துவரை கூட நியமிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தத் துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை மேலும் மோசமாக்குன்றது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில், வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத்தின் தகவல்படி, திணைக்களத்தில் 34 பேர் இருக்கவேண்டிய நிலையில் தற்போது 16 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
வெற்றிடங்கள்
கடந்த ஆண்டு, ஒரு பெண் மருத்துவர் மட்டுமே சேவையில் சேர்ந்தார். கால்நடை மருத்துவர்களை பொறுத்தவரை, அவர்கள் அதிக சம்பளம் மற்றும் சிறந்த வசதிகளை வழங்கும் தனியார் விலங்கு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள் என்று வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாடு முழுவதும் முக்கியமான விலங்கு சிகிச்சை சேவைகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர்கள் இந்தத் துறையில் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam