எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள் எனவும் ஏழு ஆண்டுகளின் இவ்வாறு விலை உயர்வு பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மாதமொன்றுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 500 மில்லியன் டொலர் தேவைப்படும்.அதேவேளை, ஏற்றுமதி வருமானம் 750 டொலர்களாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் இந்த நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசலில் அரசாங்கத்திற்கு 30 ரூபா நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
“நன்றாக சாப்பிட்டு, குடித்து விட்டு உணவை விரயமாக்கி அவற்றை குப்பை கூடையில் வீசிக் கொண்டே மக்களிடம் சிக்கனமாக இருக்குமாறு கோரினால் அது மக்களுக்கு கோபம் வரும், எனவே சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் ஆட்சியே தேவை! - ஜனாதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பு? (பத்திரிக்கை கண்ணோட்டம்) |