அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாா் இராணுவ நீதிமன்றம் 11 வருட சிறைத்தண்டனை
அமெரிக்க ஊடகவியலாளா் டெனி ஃபென்ஸ்டருக்கு (Danny Fenster) மியான்மர் இராணுவ நீதிமன்றம் 11 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
குடியேற்றச் சட்டத்தை மீறியமை, இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்தமை என்ற குற்றச்சாட்டுக்களில் அவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்த வார ஆரம்பத்தி்ல் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன,
இந்தக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும் அந்தக்குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
ஃபிராண்டியர் மியான்மர் ( Frontier Myanmar) இணையத்தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர்,(Fenster) கடந்த மே மாதம் யங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த பெப்ரவரியில் மியன்மாாில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணக்கான ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமது நாட்டின் ஊடகவியலாளா் மீது விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து அமாிக்கா இன்னும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 8 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
