யேமன் மீது அமெரிக்கா - பிரித்தானியா கூட்டு வான்வழி தாக்குதல்
தென்மேற்கு யேமன் நகரான தைஸில் உள்ள பாடசாலை ஒன்றில் பிரித்தானியா - அமெரிக்கா நடத்திய கூட்டு வான்வழி தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்த தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி ஏவுகணை அமைப்பு
கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்கப் படைகள் இரண்டு ஈரானிய ஆதரவு ஹவுதி ஏவுகணை அமைப்புகளையும் ஒரு ஆதரவு வாகனத்தையும் யேமனின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்கப் படைகள் செங்கடலில் ஒரு ஹவுதி ஆளில்லா விமானத்தையும் அழித்ததாக கூறப்படுகிறது.
யேமன் கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை தாக்கி வீழ்த்தியமைக்கு எதிராகவே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri
