அமெரிக்க பாதுகாப்பு தகவலாளருக்கு ரஷ்யாவின் குடியுரிமை
அமெரிக்க உளவுத்துறையின் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை கசியவிட்ட முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யாவின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை கையெழுத்திட்டார்.
தேசிய பாதுகாப்பு முகமை திட்டம்
39 வயதான ஸ்னோடன், 2013 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை பாதிக்கும் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) திட்டத்தை அம்பலப்படுத்தியதிலிருந்து, ரஷ்யாவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஸ்னோடன், ரஷ்யாவின் இன்றைய அறிவிப்பு குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை தாம் மீண்டும் அமெரிக்கா திரும்பினால் நியாயமான விசாரணை இடம்பெறாது என்று ஸ்னோவ்டென் 2020, செப்டெம்பரில் தெரிவித்திருந்தார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
