மத்திய கிழக்கில் F-35 போர் விமானங்களை நிலைநிறுத்திய அமெரிக்கா!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கிற்கு அதிக போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன.
பிற போர் விமானங்களின் நிலைநிறுத்தலை அமெரிக்கா மத்தியகிழக்கில் விரிவுபடுத்துகிறது என்றும், இது பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவப் படைகளை வலுப்படுத்துகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
F-16, F-22 மற்றும் F-35 போர் விமானங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்காப்புத் தன்மை
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் தற்காப்புத் தன்மையை இந்த போர் விமானங்கள் கொண்டுள்ளன.
எனினும் இந்த கருத்தக்களுக்கு பென்டகன் இதுவரை பதிலளிக்கவில்லை.
மத்திய கிழக்கு பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விருப்பத்திற்கு அமைய, ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான டேங்கர் விமானங்களின் நகர்வு மற்றும் மத்திய கிழக்கிற்கு ஒரு விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது குறித்து திங்களன்று அமெரிக்காவின் முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
ஈரானுடன் இணைந்த படை
இந்நிலையில் ஈரான் மற்றும் ஈரானுடன் இணைந்த படைகளிடமிருந்து ஏற்படக்கூடிய பின்னடைவுகளிலிருந்து மத்திய கிழக்கில் உள்ள படைகளைப் பாதுகாக்க அமெரிக்கா முயற்சிப்பதால், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தப் படையெடுப்புகளை தற்காப்பு இயல்புடையது என்று அண்மையின் விவரித்திருந்தார்.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட அமெரிக்க விமானங்கள், ஏற்கனவே மத்திய கிழக்கில் கணிசமான அளவில் காணப்படுகின்றன.
இப்பகுதியில் கிட்டத்தட்ட 40,000 துருப்புக்களைக் அமெரிக்கா கொண்டுள்ளது. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் எதிரி ஏவுகணைகளைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தக்கூடிய போர்க்கப்பல்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
