காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்! தலிபான் குற்றச்சாட்டு
காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில்,காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மக்களும் குவிந்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
இதன்போது அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக முன்வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இருப்பினும் ,இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகளால் அறிவுறுத்தப்பட்டவர்கள் மாத்திரம் குறித்த பகுதிக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியமையை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையம் ஊடாக தப்பி செல்ல முயல்கின்றனர்.
கடந்த 15ஆம் திகதிக்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் 2, 500 அமெரிக்க பிரஜைகள் உட்பட 17, 000 பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைக்கு அமெரிக்காவே காரணம் என தலிபான் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
