ஈரான் அதிகாரிகள் மீது அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்கங்களை முடக்க முயற்சிக்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.
ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சுமத்தி இவர்கள் மீது, டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க திறைசேரி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சேர்ந்த 18 அதிகாரிகள் மீது இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாதுகாப்பு உயர்நிலை கவுன்சில் செயலாளர் மற்றும் அமெரிக்கத் தடைகளை தவிர்க்க ஈரானின் எண்ணெய் விற்பனை நடவடிக்கைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளனர்.
மனித உரிமைகள் மீது முன்னெடுக்கப்படும் அரச நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அமெரிக்கா தயங்காது என அந்நாட்டு திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசண்ட் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின் போது ஈரானுக்கு குண்டு தாக்குதல் நடாத்தும் வாய்ப்பை குறித்து ஆராய்வதாக டிரம்ப் கூறியிருந்தார்.
டெஹரான் மீது அமெரிக்க கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யும் அழுத்தமாக அமெரிக்கா இந்த தாக்குதல் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.