"இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது..!" ட்ரம்பை அச்சத்தில் ஆழ்த்திய ஈரானில் இருந்து வந்த செய்தி
ஈரானின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் மாயமான அமெரிக்க விமானப்படை அதிகாரி, நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தியபோது, அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அது சந்தேகத்தையே ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் அனுப்பிய செய்தி மிகவும் சுருக்கமாகவும், எதிர்பாராத விதமாகவும் இருந்ததால், அது ஈரானியப் படைகளின் ஒரு சதித் திட்டமாக (Trap) இருக்கலாம் என அமெரிக்கா பாதுகாப்பு துறை அஞ்சியுள்ளது.
அத்துடன், குறித்த விமானி அனுப்பிய செய்தி, "ஒரு இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது" என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானி அனுப்பிய செய்தி..
ட்ரம்ப் இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச தளம் ஒன்றிற்கு தெரிவிக்கையில், விமானி அனுப்பிய செய்தி குறித்து ஒரு சர்ச்சைக்குரிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

"விமானி தனது தகவல் உபகரணத்தில் 'கடவுளுக்கே வல்லமை உரித்தாகுக' (Power be to God) என்று கூறினார். அது ஒரு இஸ்லாமியர் கூறுவதைப்போல இருந்தது" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த அதிகாரி மிகவும் மதப்பற்றுள்ளவர் என்பதால் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பின்னர் விளக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் குறிப்பிடுகையில், அந்த விமானி "God is good" (கடவுள் நல்லவர்) என்ற வார்த்தைகளையே பயன்படுத்தியதாகத் தெளிவுபடுத்தினார்.
தனது F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அந்த ஆயுதக் கட்டமைப்பு அதிகாரி (Weapons Systems Officer) ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் குதித்தார்.
அவரிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனம், ஒரு கண்காணிப்பு பீக்கன் (Tracking Beacon) மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளன. ஈரானியப் படைகள் தன்னைத் தேடி வருவதை உணர்ந்த அவர், ஒரு மலை இடுக்கிற்குள் ஒளிந்துகொண்டார்.
7,000 அடி உயரத்தில் உயிருக்கு போராட்டம்
எதிரிப் படைகளிடம் சிக்காமல் இருக்க, சுமார் 7,000 அடி உயரமுள்ள ஒரு மலைத்தொடர் வழியாக அவர் தொடர்ந்து பயணித்துள்ளார்.

அமெரிக்காவால் கூட 24 மணிநேரத்திற்கும் மேலாக அவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில், மத்திய புலனாய்வு, மீட்பு இறுதியில், தனது "தனித்துவமான திறன்களைப்" பயன்படுத்தி, மலைப்பகுதிகளில் நகர்ந்து கொண்டிருந்த அந்த விமானியின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளது. இந்தத் தகவல் உடனடியாக வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் பகிரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை இரவு, ஒரு சிறப்பு அதிரடிப் படை (Special Forces) இரகசியமாக ஈரானுக்குள் இறக்கப்பட்டு, அந்த வீரரை மீட்டெடுக்க முடிந்துள்ளது.
இந்த மீட்புப் பணியை அறிவித்த ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் அந்த வீரரை "துணிச்சலான போராளி" என்று புகழ்ந்துள்ளார்.
"எதிரி நாடுகளின் எல்லைக்குள் ஆழமாகச் சென்று, இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்பட்டது, இராணுவ வரலாற்றில் இதுவே முதல் முறை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.