இந்திய மீனவர்களின் படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு: ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் (02.03.2023) ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் முன்னிலையிலேயே குறித்த வழக்கு நடைபெற்றுள்ளது.
இதன்போது கடந்த ஜனவரி மாதம் எட்டுப் படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கில் நான்கு படகுகளின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்ததுடன், ஒருவர் வழக்குக்கு முன்னிலையாகியிருக்கவில்லை.
அரசுடைமையாக்கி கட்டளை
அத்துடன், மூன்று படகுகளின் உரிமையாளர்கள் தமக்குப் பதிலாக வேறு நபர்களை அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக நீதிமன்றம் குறித்த மூன்று படகுகளுக்கான மூன்றாம் நபரின் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற எட்டுப் படகுகளின் வழக்கில் 4 படகுகளை விடுவித்துக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 4 படகுகள் அரசுடைமையாக்கி கட்டளை பிறப்பித்திருந்தது.
6 புதிய படகுகளுக்கான வழக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, நான்கு படகுகளுக்கான உரிமையாளர்கள் வராமையினால் 4 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டுக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இரண்டு படகுகளில் உரிமையாளர்களின் வாக்குமூலங்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்குக் கட்டளைக்காகத் தவணையிடப்பட்டுள்ளது. நேற்று 14 படகுகளுக்கான வழக்குகள் இடம்பெற்றது.
நீதிமன்று உத்தரவு
இதன்போது 4 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 4 படகுகள் அரசுடைமையாக்கப்படும் என கட்டளையிடப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு படகுகளுக்கான கட்டளைக்காக எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட நான்கு படகுகளும் இலங்கை கடற்பரப்பில் வைத்துப் பராமரிக்கப்பட்டு அதற்கான பராமரிப்பு செலவாக 129,500 ரூபாவும், இரண்டாவது படகுக்கு 54,500 ரூபாவும், மூன்றாம் மற்றும் நான்காம் படகுகளுக்குத் தலா 1480,000 ரூபாவும் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்குத் தொடுனர் மற்றும் எதிராளிகள் கட்டளை தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் மேன் முறையீட்டைச் செய்து கொள்ள முடியும் எனவும் மன்று பரிந்துரைத்துள்ளது.
மேன்முறையீட்டுக் காலம்வரை படகுகள் எடுத்துச் செல்ல முடியாது எனவும்,
மேன்முறையீட்டின் பின்னர் படகினை எடுத்துச் செல்ல முடியும் என்றும்
ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதவான் கஜநிதிபாலன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு News Lankasri

நான் என் பெயருக்கு பின் துராடி என பெயர் வைத்ததற்கு அதுதான் காரணம், நான் தமிழச்சி.. சீரியல் நடிகை சரண்யா ஓபன் டாக் Cineulagam
