மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்: வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பு
மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்குமாறு உலக நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த வரி அதிகரிப்பினால் ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவடைவதுடன் ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும்.
வரிகளை அதிகரிக்கும் செயற்பாடு
மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறப்பதுடன் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் 80 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.
மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது இந்த இறப்புகளின் வீதத்தை குறைக்கும்.

வரி விதிக்கும் செயற்பாட்டினால் குறித்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.
ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.

மதுபானத்திற்கு வரி விதிப்பதனால் வன்முறை மற்றும் வீதி போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்க உதவுவதுடன் மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் விநியோகிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam