மேல் மாகாண மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்! புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியீடு
இலங்கையின் மேல் மாகாணத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி ஜூன் 21 முதல் ஜூலை 05 வரையிலான காலப்பகுதிக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின் கீழ், ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு பேர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 50 சதவீத திறன் கொண்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகளில் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், பணிகளுக்காக அத்தியாவசிய பணியாளர்களை மட்டுமே வரவழைக்க முடியும்.
மொத்த வர்த்தகத்திற்கு மட்டுமே பொருளாதார மையங்கள் திறந்திருக்கும், அதே நேரத்தில் வெதுப்பகங்களை இயக்க முடியும். திருமண செயல்பாடுகள் எதுவும் அனுமதிக்கப்படாது. இருப்பினும், பத்து விருந்தினர்களுடன் திருமண பதிவுகள் அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்குகளில் 15 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
இறந்த
ஒருவரின் உடலம் விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறுதி சடங்குகள்
முடிக்கப்பட வேண்டும்.
விருந்தகங்கள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள், இரவு கேளிக்கை விடுதிகள்
மற்றும் மதுபானகங்கள் மூடப்பட்டிருக்கும், பொதுக் கூட்டங்களும்
அனுமதிக்கப்படாது.