சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் (Beliatta) தேர்தல் தொகுதி அமைப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
இவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் அங்கத்துவத்தை நேற்று (18.04.2024) பெற்று கொண்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நந்தன அத்தபத்துவின் மகன், பிரவீன் ருவிந்த அத்தபத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக செயற்பட்டு வந்திருந்தாா்.
கட்சிக்கான அங்கத்துவம்
இந்நிலையிலேயே, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவிடம் (Vajira Abeywardena) கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
