மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு (Photos)
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼
எனும் மைல்கல் பகுதியில் இன்று(19) அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக
தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
பாதிப்பேற்பட்டுள்ள தொடருந்து பாதையை சீர்செய்யும் பணிகளில் தொடருந்து நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.
தபால் தொடருந்து
மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என தொடருந்து நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் தொடருந்து ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டது.
இதேவேளை, தொடருந்து பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே தொடருந்தும், பொடி மெனிகே தொடருந்தும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாரிய மண்சரிவு
அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய உடரட மெனிக்கே தொடருந்து இது வரை புறப்படாமல் உள்ளது.
அத்துடன், காலை 08.30 மணிக்கு கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த பொடி மெனிகே தொடருந்தும் சில மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மண்சரிவு என்பதன் காரணமாக சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


