ஐ.தே.க வின் தலைமைப்பதவி குறித்து சஜித் தரப்பு வெளியிட்ட தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இதற்கான விட்டுக்கொடுப்பை ரணில் விக்ரமசிங்க செய்யாதவரை இணைவு என்பது சாத்தியப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்துக்கு ரணில் அழைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் உள்ளேன்.

இந்த இணைவு என்பது அரசியல் பிரசாரமாக இருக்கக்கூடாது. உண்மையான இணைவாக இருக்க வேண்டும்.
அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித்துக்கு, ரணில் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் உண்மையான இணைவுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மாறாக தோல்வியை மறைப்பதற்காக இணைவு பற்றி பேசி பயன் இல்லை" என்றும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam