நாட்டுக்காக ஐ.தே.கட்சியும் மொட்டுக்கட்சியும் இணையும்-சாகர காரியவசம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் கட்சிகளின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் நாட்டுக்காக இணைய முடியுமாயின் கட்டாயம் இணைவோம் என பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்த பின் இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதவியுடன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைய தலைமுறையினருக்கான கொள்கையுடன் முன்நோக்கி செல்ல எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க பொதுஜன பெரமுன தயாராக உள்ளது.
கொள்கைகளை மாற்றாவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு இருப்பில்லை
ஐக்கிய தேசியக்கட்சி நாட்டில் உள்ள பழைய கட்சிகளில் ஒன்று என்பதால், அந்த கட்சியுடன் இணையவது அந்த கட்சிக்கும் பலத்தை கொடுக்கும்.கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சி நாட்டு மக்களின் தேவைக்கு அமைய மாறவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு இருப்பது என்பது இருக்காது.
இலங்கையின் பழைய இடதுசாரி அரசியல் கட்சிகள் அதனை எதிர்நோக்க நேரிட்டது. கொள்கைகளை மாற்றுவதில்லை என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சியும் அந்த நிலைப்பாட்டில் இருக்காது என்று நினைக்கின்றேன். இரண்டு கட்சிகளுக்கும் நாட்டின் நன்மைக்கான பொறுப்பு இருக்கின்றது எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
