ஐ.தே.கவின் 79ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் ஒத்தி வைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வினை ஒத்தி வைப்பதென கட்சியின் முகாமைத்துவ குழு இன்று தீா்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு எதிர்வரும் 6ம் திகதியுடன் 76 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகளை ஒத்தி வைப்பதாகவும் இதே மாதத்தில் வேறும் நாளில் நிகழ்வினை நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு இந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.



