கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரே தடவையில் பல்கலைக்கழகங்களை திறக்காது கட்டம் கட்டமாக மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நான்காம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என குழுக்களாக பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதி வசதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வதியும் கிராம சேவைப் பிரிவு அல்லது பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இணைந்து கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam