கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரே தடவையில் பல்கலைக்கழகங்களை திறக்காது கட்டம் கட்டமாக மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நான்காம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என குழுக்களாக பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதி வசதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வதியும் கிராம சேவைப் பிரிவு அல்லது பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இணைந்து கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam