கடும் பொருளாதார மந்த நிலையால் தடுமாறும் பிரித்தானியா! புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறான திட்டம் காரணமாக கடும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வணிக அமைப்பு இயக்குனர் டோனி டேங்கர் பர்மிங்காமில் நடைபெற்ற பிரித்தானிய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மந்த நிலையை எதிர்த்துப் போராடுவதற்கும் தங்களுக்குத் தெரியும் என்றும், இருப்பினும் இரண்டையும் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது தங்களுக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam