ஐக்கிய மக்கள் கூட்டணி இம்மாதம் அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்கப்படும்
ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என இன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இன்று முற்பகல் கொழும்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கூட்டமைப்பில் முதல் பங்காளி கட்சியாக, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கரம்கோர்க்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் உத்தேச யாப்பு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் கூட்டணி கைப்பற்றுவது தொடர்பான வியூகம், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான வியூகம், நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
