சாகல மற்றும் வஜிரவால் அதிருப்தியடைந்துள்ள ஐதேகவினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன(Vajira Abeywardena) மற்றும் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) ஆகியோர் தொடர்பில் கடும் அதிருப்தி நிலவுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வஜிர அபேவர்த்தனவும், ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த சாகல ரத்நாயக்கவும் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஐதேகவின் பின்னடைவு
அதன் காரணமாக கட்சியை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத நிலையில் கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாது பின்னடைவைச் சந்தித்திருந்தது.

தற்போது கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வஜிர அபேவர்த்தன மற்றும் சாகல ரத்நாயக்கவை அகற்ற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri