இலங்கை உட்பட சில நாடுகளின் நிலைமை மோசம் - ஜீ.7 நாடுகளை உதவுமாறு கோரும் யுனிசெப்
இலங்கை போன்ற நாடுகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்குத் தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகள் மற்றும் பிரேசில், ஆஜன்டீனா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொற்று நோய் காரணமாக அந்நாடுகளின் சுகாதார கட்டமைப்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜீ 7 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.