தொடருந்து பாதையினை அண்டிய அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத்திட்டம்
மஹரகம, ஹோமாகம மற்றும் பாதுக்கை தொடருந்து பாதைகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் வீட்டுத் தொகுதி தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு தொடருந்து திட்டத்தின் கீழ் மாளிகாவத்தை லோகோ சந்தியிலிருந்து பாதுக்கை தொடருந்து நிலையம் வரையிலான தொடருந்து இருப்புப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்கு 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு (யுடிஏ) சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இருந்து வாங்கப்பட்ட 694 வீட்டுத் தொகுதிகளில் மீள்குடியேற்றங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன, மேலும் 144 வீட்டுத் தொகுதிகள்நகர மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து பெறப்பட உள்ளன.
அமைச்சரவை அங்கீகாரம்
கூடுதலாக, மஹரகம, ஹோமாகம மற்றும் பாதுக்கையில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்காக தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான, கொட்டாவையில் உள்ள மலபல்ல பகுதியில் 120 வீடுகளை கொண்ட ஒரு வீட்டுத் தொகுதி கட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அந்த வீட்டுத் திட்டங்களின் கட்டுமானங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதற்கமைய, கொட்டாவ, மாரப்பல்லவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும், அந்த காணியில் உள்ள வீட்டுத் தொகுதியையும் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 6(1) இன் படி, தேசிய வீடமைப்பு மேம்பாட்டு அதிகாரசபைக்கு இலவச மானியமாக மாற்றுவதற்கு போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு செலவுகள் அதிகமாக இல்லாத வகையில் தொடர்புடைய உறுதிப் பத்திரங்களை வழங்கும் மேற்படி திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri