வீதி சீரின்மையால் சிரமங்களை எதிர்நோக்கும் யாழ். மக்கள்
யாழ். அச்சுவேலி - தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வீதி ஊடாக பயனிக்கும் பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக தொண்டமனாறு ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததோடு குறித்த வீதிக்கு மேலாக வெள்ளம் வழிந்தொடுகிறது.
இதற்கமைய புதிதாக அந்த வீதியில் பயணிப்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் , சிறிய ரக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போரின் வாகனங்களும் சேதமடைந்து வருகின்றன.
குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றபோதிலும் , அவை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தபடாமையால் , பலரும் விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
