புத்தளத்தில் தொடருந்தில் மோதி பரிதாபமாக பலியான நபர்
புத்தளம் - தில்லையடி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி நபர் ஒருவர் இறந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி நேற்று (12.01.2024) இரவு பயணம் செய்த பயணிகள் தொடருந்தில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
மேலும், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam